பங்குனி உத்திரத்தின் பெருமை

பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணபேறு கிட்டும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விபரிக்கப்படுகின்றது.


மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருமணம்


பார்வதி - பரமேஸ்வரர் திருமணம்


சீதாதேவி - ஸ்ரீ ராமர் திருமணம்


இந்திராணி - தேவேந்திரன் திருமணம்


இருபத்தேழு நட்சத்திரம் - சந்திரன் திருமணம்


நம்பியின் மகளான ஸ்ரீ வள்ளி அவதரித்தது. இறைவனால் எரிக்கப்பட்ட மன்மதன் உயிர்பெற்றது. மஹாலெட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது. ஸ்ரீ சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது. பாண்டவரில் ஒருவரான அர்ச்சுனன் அவதரித்தது. ஸ்ரீ நந்தியெம்பகவானின் திருமணம் திருமழுபாடியில் நிகழ்ந்தது.


MAKE YOUR CONTRIBUTIONS

Donate for Sevas & Homas to our Holy Universal Mother Goddess Sri Merupuram Mahabhadrakaliamman, London and get divine blessings.

Donate Now >>